Pages

Sunday, March 22, 2020

ராம நாமமா. ராம நாமத்தின் மகிமை!




எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்க எவன் கானப்படுகிரானோ, அவனே மாருதி எனும் வாயுபுத்திரன்' என்ற வாசகங்களால் ஆஞ்சநேயன் எனும் ஹனுமனுக்கு அடையாளம் காட்டபடுகிறது. ராம ஸேவை ஒன்றையேலட்சியமாகக் கொண்டு, ராமநாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக் கொண்டு இருப்பவன் சிரஞ்சீவியான அனுமன். அப்பேற்பட்ட ஹனுமனுக்கும் ராமனுக்கும் யுத்தம் நடந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?அப்படி ஒருசம்பவம் நம் புராணங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அது காலத்தால் அழியாத உண்மை ஒன்றை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. 

பட்டாபிஷேகத்துக்குப் பிறகு நீதி தவறாது ராமராஜ்ஜியம் நடத்தி வந்த ஸ்ரீராமர், மக்களின் நலம் கருதி நாட்டின் வளமைக்காக, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்திரி முதலான மகரிஷிகளைக் கொண்டு யாகம் ஒன்றை நடத்தினார், அவர் அயோத்தியை அடுத்த அழகிய வனத்தில், பெரிய யாக குண்டங்கள் அமைத்துமுனிவர்கள் யாகத்தை நடத்திக்கொண்டு இருந்தனர்.சக்கரவர்த்தி ஸ்ரீராமரின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய நாட்டின் மன்னன் சகுந்தன். அவன் ஒருநாள் வேட்டையாடிவிட்டு வரும்போது யாகசாலைக்கு அருகில் வந்தான். தான் வேட்டையாடிவிட்டு திரும்பியிருந்தபடியல், யாகசாலைக்குள் நுழைவது சரியல்ல என்று கருதி வெளியில் நின்றபடியே நமஸ்கரித்துவசிஷ்டாதி முனிவர்களுக்கு என் வணக்கங்கள்' என்று கூறி புறப்பட தயாரானான். சகுந்தன் கூறிய வார்த்தைகள், நாரத முனிவரின் காதில் விழுந்தது. விறுவிறுப்பான நாடகம் ஒன்றை தொடங்க நினைத்தார். 

அற்புதமான கதைக்கு, கரு ஓன்று கிடைக்க...விடுவாரா நாரதர்? நேராக விசுவாமித்திரரிடம் சென்றார்."பார்த்தீர்களா மகரிஷி, இந்தச் சகுந்தன் சாதாரண சிற்றரசன் இவனுக்கு எத்தனை திமிர்? இங்கே யாகசாலைக்கு முன்னே நின்றுகொண்டு வசிஷ்டாதி முனிவர்களுக்கு வணக்கம் என்று கூறிச் செல்கிறான். அப்படியென்ன வசிஷ்டர் உயர்ந்துவிட்டார்? தாங்களும்தான் ஸ்ரீராமரின் குரு. தாங்களும்தான் இந்த யாகத்தை முன்னின்றுநடத்துகிறீர்கள் தங்கள் பெயரையும் சொல்லிஒரு நமஸ்காரம் செய்திருக்கலாம் அல்லவா? தங்களை வேண்டுமென்றே அவமானப்படுத்த , இவன்வசிஷ்டரை முதன்மைப்படுத்தி மற்றவர்களைச் சிறுமைப்படுத்தி, அவருக்கு மட்டும் வணக்கம் செலுத்தியிருக்கிறான் என்றார் நாரதர் .உடனே விஸ்வாமித்திரரின் முகம் கோபத்தால் சிவந்தது கண்களில் தீப்பொறி பறக்க.....அவர் சாபமிடத் தொடங்குமுன், நாரதர் தடுத்து நிறுத்தினார். " அந்த அற்பனுக்கு சாபமிட்டு தங்கள் தவ பலத்தை என் குறைத்துக் கொள்ளவேண்டும்? தங்கள் சீடர் ஸ்ரீராமர், சகுந்தனோ அந்த ஸ்ரீராமரின் கீழே இருக்கிற சிற்றரசன். இவன் செய்த பிழையை ஸ்ரீராமரிடம் கூறி இவனுக்கு உரிய தண்டனையை அவரையே தரச் சொல்லுங்கள் என்றார் நாரதர்.விஸ்வாமித்திரருக்கும் அது சரியென பட்டது , சில நாழிகைகள் கழித்து யாக சாலைக்கு வந்த ஸ்ரீராமரிடம் "உன் குருவை ஒருவன் அவமதித்தால் அவனுக்கு நீ என்ன தண்டனை தருவாய்?" என்று கோபத்துடன் கேட்டார். அவரை யாரோ அவமரியாதை செய்திருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டார் ஸ்ரீஎராமர். " குருதேவா! தங்களை அவமஹித்தவர்கள் யாராயிருந்தாலும் சரி அவர்களுக்கு தக்க தண்டனையை தாங்களே கூறுங்கள். நிறைவேற்றி வைப்பது என் கடமை என்றார்."சகுந்தன் என்னை அவமதித்துவிட்டான் அவன் சிரசை இன்று சூர்யா அஸ்தமனத்துக்குள் இன் காலடியில் சேர்க்கவேண்டும் ". என்று விச்வாமித்திரர் சொல்லி முடிக்ககூட இல்லை"தங்கள் ஆணைப்படியே செய்கிறேன் இதுசத்தியம்!" என்று வாக்களித்துவிட்டார் ஸ்ரீராமர்.நாரதர் தொடங்கிய முதல் காட்சி முடிந்தது. 

ஸ்ரீராமர் செய்தி அனுப்பினால் போதும், சகுந்தன் தான் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து அனுப்பிவிடுவான். இருந்தாலும் அது ஸ்ரீராமர் கடைபிடிக்கும் ஷத்திரிய தர்மத்துக்கு அழகாகுமா? எனவே ஸ்ரீராமர் போர் கோலம் பூண்டு சகுந்தனின் நாட்டை நோக்கி புறப்படத் தயாரானார். நாடகத்தின் இரண்டாவது காட்சியை தொடங்கினார் நாரதர். நேரே சகுந்தனிடம் சென்றார் "என்ன காரியம் செய்து விட்டாயப்பா? வசிஷ்டரின் பெயரைச் சொன்னவன் விஸ்வாமித்திரரின் பெயரையும் சொல்லியிருக்கக் கூடாதா ? இப்போது பேராபத்தை தேடிக் கொண்டாயே? படையெடுத்து வருபவர் ஸ்ரீராமர் ஆயிற்றே என்ன செய்யப் போகிறாய் என்று ஆதங்கமாக கேட்டுவிட்டு மற்ற விவரங்களையும் சொன்னார்."நான் என்ன செய்ய முடியும் சுவாமி

இலங்கேஸ்வரன் ராவணனாலேயே எதிர்க்க முடியாத ஸ்ரீராமரை நான் எப்படி எதிர்க்க முடியும்? முடியாது. என் தலைதானே ஸ்ரீராமருக்கு வேண்டும்? அதைத் தாங்களே வெட்டி எடுத்துச் சென்று அவரிடம் தந்துவிடுங்கள்" என்று உருக்கமாக கூறி சகுந்தன் தன் வாளை உருவ, நாரதர் அவனைத் தடுத்துச் சிரித்தார்."சகுந்தா! நீ உண்மையில் விசுவாமித்திரரை அவமதிக்கவில்லையே ... அப்படி இருக்கும்போது, என் கலங்குகிறாய்? என்ற நாரதர், "சகுந்தா உன் நாட்டை அடுத்த வனத்தில், ஆஞ்சநேயரின் தை அஞ்சனா தேவி ஆட்சி புரியும் கானகம் இருக்கிறது அங்கே சென்று தவம் செய். அவள் கருணை மிக்கவள். அவள் உனக்கு உயிர்ப்பிச்சை தர முடியும்.பிறகு ராம பாணம்கூட ஒன்றும் செய்ய முடியாது" என்று உறுதி கூறினார்.சகுந்தன் மனதில் நம்பிக்கை பிறந்தது , அஞ்சனா தேவி ஆட்சி புரியும் கானகம் சென்றான். அங்கே அக்னியை வளர்த்தான் " அஞ்சனா தேவி சரணம்" என்று பக்தியுடன் அக்னியை சுற்றி பலமுறை வளம் வந்து பிராணத்தியாகம்செய்யத் தயாரானான். தாயல்லவா அவள்! தன்னைச் சரணடைந்த குழந்தையை சாக விடுவாளா? அவன் முன் தோன்றி, "குழந்தாய் கவலைப்படாதே! என்னைச் சரணடைந்த உயிருக்கு எந்த ஆவத்தும் நேராது. தீர்காயுஷ்மான் பவது" என்று ஆசி கூறி அவன்நீண்ட ஆயுள் வாழ வரம் தந்தாள்.சகுந்தன் அவள் திருவடியில் விழுந்து வணங்கினான். " நான் மரண கண்டத்தில் சிக்கியுள்ளேன், தாயே ஸ்ரீராமர் என் சிரஸைத்தன் குருவின் காலடியில் சூர்ய அஸ்தமனத்துக்குள் சேர்க்கும் சபதம் பூண்டு, என் மீது போர் தொடுத்துவருகிறார். இப்போது நான் உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் என அருளுங்கள்" என்றான்.அதைக் கேட்டு பதறிப்போனாள் அஞ்சனாதேவி. 

ஸ்ரீராமரின் பாணத்திலிருந்து சகுந்தனைக் காப்பாற்றுவது என்பது இயலாத காரியமாயிற்றே எனக் கலங்கினாள். இருந்தாலும், தான் உயிர்பிச்சை அளித்தவனிக் காக்க வேண்டியது தன் கடமை என்பதில் உறுதியாக இருந்தாள். தன் வாக்கைக் காக்கும் பொறுப்பை தன் மைந்தன் ஹனுமனிடம் ஒப்படைக்க முடிவு செய்தாள். தன்மகனை தன் முன்னே தோன்றும்படி சங்கல்பித்தாள். அந்த நிமிடமே எதிரே வந்துவணங்கி நின்றான் ஹனுமன். ஸ்ரீராமரின் பித்ரு பக்திக்கு ஹனுமனின் மாத்ரு பக்தி எந்த விதத்திலும் குறைந்ததல்ல."மகனே! இவன் சகுந்தராஜன். பிராணத் தியாகம் செய்யத் துணிந்தபோது, இவனைக் காப்பாற்றி, உயிர்பிச்சை தருவதாக் வாக்குறுதி தந்துவிட்டேன். என் வாக்கைக் காப்பாற்றும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன் இவனை எப்படியேனும் காப்பாற்று!" என்று கட்டளையிட்டாள். 'அப்படியே ஆகட்டும் அன்னையே என உறுதியளித்தான் ஹனுமன்.பின்பு, தனது உயிரை பறிப்பதற்கு ஸ்ரீராமர்தேடுகிறார் என்பதைச் சகுந்தன் சொல்ல.... சலனமே இல்லாமல் நின்றான் ஹனுமன். எதிர்ப்பது ஸ்ரீராமராக இருந்தாள் என்ன? மும்மூர்த்திகளே ஆனாலும் என்ன? தாயிடம் அடைக்கலம் கேட்டு வந்தவனைக் காப்பது தன் கடமை எனும் உறுதியுடன் நின்றான். எந்த ஆபத்தையும் எதிர்க்கும் வல்லமையின் ரகசியம் ஒன்றை அவன் அறிந்து வைத்திருந்தான்.தன் வாலை நீளமாக வளர்த்து, அதனை ஒரு கோட்டைபோல் அமைத்தான். அதற்குள் சகுந்தனைப் பாதுகாப்பாக அமர்த்திவிட்டு, சிறு குரங்கின் உருவெடுத்து, வால் கோட்டையின் மேல் அமர்ந்துகொண்டு, தாய்க்குச் செய்யும் கடமைக்காகத் தாயினும் மேலான தலைவனையே எதிர்க்கத் தயாரானான்!இதனிடையில் ரமா - லட்சுமணர்களின் சைன்யம் சகுந்தராஜனின் தலைநகரில் புகுந்தது. உயிருக்கு பயந்து சகுந்தன் அஞ்சனா வனத்தில் மறைந்து இருப்பதை அறிந்து ஸ்ரீராமர் அங்கே சென்று போரைத் தொடங்கினார். 

சகுந்தராஜன்மறைந்திருக்கும் வால் போன்ற கோட்டையை நோக்கி, ஸ்ரீராமரின் அஸ்திரங்கள் சரமாரியாக வானில் பறந்தன. ஆனால், அவர் எய்தஅஸ்திரங்கள் யாவும் அடுத்த சில விநாடிகளில் அவரின் திருவடிகளையே வந்தடைந்தன. அதிசயித்து போனார் ஸ்ரீராமர்.யுத்தம் தொடர்ந்தது ஸ்ரீராமர் கற்ற அஸ்திர வித்தைகள் அனைத்துமே தோற்று நின்றன. இதற்க்கான காரணம் தெரியாமல் ஸ்ரீராமர் திகைத்து நிற்க, நாரத முனிவர் தான் போட்ட முடிச்சை அவிழ்க்க அங்கே வந்துநின்றார்." ரமா! உன் அஸ்திரங்களின் சிம்ம நாதமும், உனது யுத்த பேரிகையின் சப்தமும் ஒரு கணம் நிற்கட்டும். இப்போது இதான் காரணத்தை நீ அறியலாம்" என்றார் சூசகமாக. ஒருகணம் யுத்த பூமியில் அமைதி தோன்றியது. அப்போதுஎங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த 'ராம்...ராம் ' என்னும் 'ராம' நாம சப்தம் கேட்டு அனைவரும் மெய் சிலிர்த்தனர்.அது ஹனுமனின் குரல்தான். அவன் ஒருவனால்தான் ராம நாமத்தை அத்தனை பக்தியோடும் , சக்தியோடும் ஜபிக்க முடியும் என்பது ஸ்ரீராமருக்கு தெரியும்.நாடகத்தின் இறுதி காட்சிக்கு வந்தார் நாரதர். "ராமா! உன் திருநாமத்தின் சக்திக்கு முன்னால், உன்னாலேயே எதுவும் செய்ய முடியாது. உன் நாமம் அத்தனை புனிதமானது, சக்தி வாய்ந்தது. உலகின் எந்த சக்தியாலும் உன் நாமத்தை எதிர்த்து நிற்க முடியாது. காலத்தாலும் அழியாத பெருமை வாய்ந்தது உன் நாமம். அதிலும் அதனை ஆஞ்சநேயன் ஜபிக்கிறான் என்றால், அதை வெல்லஎவராலும் முடியாது? என்று கூறி நடந்ததையெல்லாம் விளக்கினார்."ஹனுமன் ராம நாமம் ஜெபிப்பதை நிறுத்தினால்தான், உன் அஸ்திரங்கள் இந்த எல்லையை கடக்கும். ஹனுமனை அழித்தால்தான் அந்த நாமம் ஒலிப்பது ஓயும். அவன் இதயத்திலோ, ஸ்ரீராமனையே பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறான் .

அவனை அழிப்பது சுலபமல்ல ஆனால் ஹனுமனை வென்றால்தான் சகுந்தனை வெல்ல முடியும் அப்படியெனில் ஸ்ரீராமன் தன்னையே அழித்துக்கொண்டால்தான் இது சாத்தியமாகும்" என்று சிக்கலை மேலும் சிக்கலாக்கி, நாரதர் விளக்கியபோது,"வேண்டாம் ராமா, வேண்டாம்! இந்த விபரீதத்துக்கு என் அகந்தையே காரணம்போரை.

தெய்வ நாமங்களை மந்திரமாக உருவேற்றுவது, ஓர் அரிய செயல். அதை விவரிக்கும் கதை இது...
வீராசாமி என்பவர், முக்கிய பணி காரணமாக, வீட்டை விட்டு புறப்பட்டார். தான் நாடிப் போகும் பணி, நல்லவிதமாக முடிய வேண்டுமே என்ற கவலையோடு சென்று கொண்டிருந்தவரின் காதில், யாரோ சொன்ன, 'ராமா' என்ற திருநாமம் கேட்டது. மனம், ராம நாமத்தில் பதிய, சென்ற காரியம், சுலபமாக முடிந்தது. மகிழ்ச்சி தாங்கவில்லை, வீராசாமிக்கு.

எனவே, படுக்கையை விட்டு எழுந்தவுடன், தான் சந்திக்கும் முதல் நபரை, ராம நாமம் சொல்லச் சொல்லி, அதன் பின், தன் வேலைகளை கவனிக்க துவங்கினார். இவ்வாறே பல நாட்கள் சென்றன.

ஒருநாள், வீராசாமியின் கண்ணில், கோபாலன் என்பவர் அகப்பட்டார். அவனை, ராம நாமம் சொல்லச் சொல்லி வற்புறுத்தினார், வீராசாமி.

கோபாலனோ மறுத்தார்; வீராசாமி விடவில்லை.

'ராம நாமா சொன்னாலொழிய, உன்னை விடமாட்டேன்...' என்று, கோபாலனின் ஆடையை பிடித்தார். விபரமறிந்து, ஊர் மக்கள் கூடினர்.

'அவர், சொல்லா விட்டால் என்ன... நாங்கள் சொல்கிறோம்...' என, எல்லாரும், 'ராமா' என்று கூவினர். என் வழக்கப்படி, நான் முதலில் பார்த்தது, கோபாலனை தான். ஆகையால், இவன் தான் சொல்ல வேண்டும்...' என்றார், வீராசாமி.

கோபாலனோ, 'ஒருக்காலும் நான் சொல்ல மாட்டேன்...' என, மறுத்தார்.

பிரச்னை, அரசரிடம் போனது.

இரு தரப்பின் விபரமறிந்த அரசர், 'ஏன் மறுக்கிறாய், கோபாலா... ஒருமுறை, ராம நாமத்தை சொல்லேன்...' என்றார்.

'அரசே... எனக்கு, மனைவி, மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு என்னை விட்டால், ஆதரவில்லை... அப்படியிருக்க, நான் எப்படி சொல்வேன்...' என்றார், கோபாலன்.

சபையில் இருந்த அனைவரும், 'பெருமை நிறைந்த, ராம நாமத்தை சொல்ல, இப்படி பயப்படுகிறாயே...' என, சிரித்தனர்.

'சீக்கிரம் சொல்... உன்னை விட மாட்டேன்...' என, வற்புறுத்தினார், அரசர்.

'சரி, அரசே... என் மனைவி, மக்களின் வாழ்வுக்கு வழி செய்தால், சொல்கிறேன்...' என்றார், கோபாலன்.

அதை ஏற்ற அரசர், கோபாலனின் குடும்பத்திற்கு, நிலங்கள் எழுதி வைத்து, செல்வமும் வழங்கினார். அப்போதும் வீராசாமியிடம், 'சொல்லித்தான் ஆக வேண்டுமா...' என கேட்டார், கோபாலன்.

'ஆம்...' என்றார், வீராசாமி.

கைகளை தலைக்கு மேல் குவித்து, கண்களில் வழிந்த கண்ணீர் உடம்பை நனைக்க, கண்களை மூடியபடியே, 'ராமா...' என்றார்.

அதே வினாடியில், கோபாலனின் கபாலம் பிளக்க, அதிலிருந்து ஒரு ஜோதி வெளிப்பட்டு, ஆகாயத்தை நோக்கி சென்றது; அவர் உடல், தரையில் சாய்ந்தது.

ராம நாமம் சொல்லச் சொல்லி வற்புறுத்திய, வீராசாமி மற்றும் அரசர் உட்பட அனைவரும், கோபாலனின் துாய்மையான, ஆழமான ராம பக்தியை கண்டு, கண்ணீர் சிந்தினர்.

தெய்வ நாமத்தை, நாடி நரம்பெல்லாம் ஊடுருவும்படியாக உருவேற்றிய மகான்கள் பலர், அன்றும் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர்.

தெய்வ நாமத்தை சொல்வோம், உருவேற்றுவோம். முடியாவிட்டால், தெய்வ நாமங்களை சொல்லும் நல்லவர்களை இகழாமல் இருப்போம்.





No comments: